Sunday 25 August 2013

A FABULOUS PANCHANGAM


செயற்கரியன செய்த சான்றோர்-#1

திவான் பகதூர் சுவாமிக்கண்ணு பிள்ளை 



    சாமிக்கண்ணு பிள்ளையவர்களின் எ·பெமெரிஸைப் பற்றி எழுதவேண்டியுள்ளது.
அதற்கு ஆராய்ச்சி மிகவும் தேவை.
பேராசிரிய சுவாமிக்கண்ணு பிள்ளை 1865-இல் பிறந்தவர். ஏழைக்குடும்பத்தைச்சேர்ந்தவர். ஆனால் தம்முடைய சுய முயற்சியால் பிற்காலத் தமிழர்கள் யாருமே செய்திராத கடும் ஆராய்ச்சிகளைச் செய்து மேம்பட்டவர்.
சட்டத்தில் மேற்படிப்பு படித்தவர். சென்னை சட்டசபைக் கவுன்ஸிலின் தலைவராக இருந்தவர். சட்டசபை நூலகத்தை அவரே உருவாக்கினார். திவான் பகதூர் என்னும் உயர் விருதையும் அரசு விருது ஒன்றையும் பெற்றவர்.

    வசதிகளற்ற அந்தக் காலத்தில் எவ்வளவோ உழைத்து சில வெள்ளைக்காரர்கள் சிரமப் பட்டு பல விஷயங்களைக் கண்டுபிடித்து வெளியிட்டிருக்கிறார்கள்.

    Jouveau Dubreil, Robert Sewell போன்ற அறிஞர்கள், பல்லவர்கள், விஜயநகரம் பற்றிய கண்டுபிடிப்புகளை முதன்முதலில் செய்தவர்கள்.
    ராபர்ட் ஸெவெல் எழுதிய 'The Forgotten Kingdom' என்னும் புத்தகம் அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது. அந்த நூல் விஜயநகர சாம்ராஜ்யத்தைப் பற்றிய அருமையான நூல்.
அந்த அளவுக்கு இன்னொரு நூலை விஜயநகரத்தைப் பற்றி இன்னும் யாரும் எழுதவில்லை.
Social Life Under Vijayanagar Empire என்னும் நூல் ஒன்று இருக்கிறது. ஆனால் அதில் சில துறைகள் மட்டுமே விரிவாக இருக்கும். பல கன்னட மொழிக் குறிப்புகளும் காணப்படும்.
    Quaritz Wales என்னும் ஆய்வாளர் கடாரத்தைப் பற்றி விரிவான ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார்.

    திவான்பகதூர் சாமிக்கண்ணு பிள்ளை ஜோதிடம், வானநூல் அறிந்தவர். அவர் Indian Chronology என்னும் என்னும் சிறப்புப் பஞ்சாங்கத்தைத் தயாரித்து, கல்வெட்டுக்களில் காணப்படும் பஞ்சாங்கக் குறிப்புகளைப் பார்த்து அவற்றின் வருட மாதந் தேதியைக் கணித்துச் சொல்லி யிருக்கிறார். பதினான்கு ஆண்டுகள் தொடர்ந்து ஆராய்ச்சிகள் செய்து 'Indian Ephemeris - AD 700 to AD 2000' என்னும் ஏழு தொகுதிகள் கொண்ட நூலை வெளியிட்டார். 
கிபி 700-ஆம் ஆண்டிலிருந்து கிபி 2000-ஆம் ஆண்டுவரைக்கும் ஒவ்வொரு நாளுக்கும் உரிய நாள், நட்சத்திரம், திதி, கிழ்மை போன்றவற்றைக் கண்டுபிடித்து வெளியிட்டிருக்கிறார். அந்த எஃபெமெரிஸின் உதவியோடு, கல்வெட்டுக்களில் காணப்படும் நாள், மாதம், நட்சத்திரம் ஆகியவற்றைக் கொண்டு அந்தக் குறிப்பு எந்த ஆணடைச் சேர்ந்தது என்பதைக் கண்டுபிடிக்கலாம். இந்திய நாட்டு அரசர்களின், நிகழ்ச்சிகளின் தேதியை இதைவைத்துத்தான் நிறுவியிருக்கிறார்கள்.
    1922-இல் இந்த அரிய நூல் வெளியாகியது.

    இந்த நூலை வெளியிடுவதிலும் மேற்கொண்டு ஆய்வுகள் தொடர்வதற்கும் ராபர்ட் ஸெவெல் ரொம்பவும் உதவி செய்து உழைத்திருக்கிறார்.
    Dr.Van Wijk என்னும் டச்சுக்காரர் கணித சாத்திர நிபுணர் Indian Calender என்னும் பொதுவான தலைப்பில் அரிய ஆராய்ச்சி செய்து நூலும் வெளியிட்டிருக்கிறார். அவருக்கும் ராபர்ட் ஸெவெல் மிகவும் உதவியிருக்கிறார். இந்த நூல், இந்திய பஞ்சாங்கக் கணிதத்தைப்
பற்றிய ஆய்வு.
    இந்தியப் பஞ்சாங்க/கால ஆராய்ச்சியில் இன்னும் இருவர் அவர்களுக்கு முன்னரேயே ஈடுபட்டவர்கள்.
    Professor Kielhorn, Professor Jacobi ஆகியோர் செய்த ஆராய்ச்சிகளை விஞ்சுவதற்கு வேறு நூல்கள் இல்லை என்று கருதப்படுகிறது.
    சாமிக்கண்ணு பிள்ளை 'Panchang And Horoscope or The Indian Calender and Indian Astrology' என்னும் இன்னொரு அரிய நூலையும் வெளியிட்டிருக்கிறார்.
    இந்த நூலின் Contents, Index ஆகிய பகுதிகளைப் பார்த்தாலேயேகூட போதும்.

    அத்தனைப் புதிய விஷயங்கள் இருப்பதை அறிந்துகொள்ளலாம்.      
    எடுத்துக்காட்டுக்காக  மூன்று பக்கங்களின் பகுதிகளை ஸ்கேன் செய்து மேலே போட்டிருக்கிறேன்.
 தற்காலத்தில் இந்தியர்களிடையே வசதிகள் இருந்தும் இப்படியெல்லாம் ஆராய்ச்சிகள் செய்வதில்லை.

                                       $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$